பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் நேரில் ஆஜராக உத்தரவு!

தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர், வரும் ஜூலை 11 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-07-06 04:57 GMT

பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர்

தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர், வரும் ஜூலை 11 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே கோவையில் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என வழக்கறிஞர் ஆர் சி பால் கனகராஜ் என்று தெரிவித்தார். விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம்? ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார், தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News