31-ம் தேதி வரை படகு போட்டி

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-05-29 15:24 GMT

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது.


ஊட்டி படகு இல்லம் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா 2024 ஊட்டி படகு இல்லத்தில் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 படகு போட்டியுடன் தொடங்க உள்ளது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில் ஆறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், தம்பதியர்கள், பத்திரிக்கையாளர், துடுப்பு படகு போட்டி மற்றும் அரசு அலுவலர்களுக்கான போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நபர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது. இவ்விழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுக்கிழமை வரை 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது. படகு இல்லத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News