மே மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமோற்சவம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளின் பிரமோற்சவத்தை மே மாதத்தில் நடத்த திட்டம் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-03-08 09:13 GMT

பைல் படம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளின் பிரமோற்சவத்தை மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் 50 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள பிரமோற்சவத்தை நடத்தக் கோரி சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அரசின் நிலைப்பாடு குறித்து பொது தீட்சதர்கள் குழு விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணை மார்ச் 25 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News