வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: பெண் கைது

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-13 13:06 GMT

கைதான பெண்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 87). இவர் மனைவி குப்பம்மாள். இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் கடக்கு வந்த ஒரு பெண் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

கடைக்காரர் ராமசாமி கவனிக்காத நேரத்தில் நைசாக வீட்டுக்குள் சென்ற அந்த பெண் பீரோவை திறந்து 9 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி, சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டையை சேர்ந்த மைதிலி (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வேறு ஒரு திருட்டு வழக்கில் வேலுார் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஒருநாள் நீதிமன்ற உத்திரவின்படி போலீஸ் காவலில் எடுத்து சங்ககிரி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது மைதிலி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் வடுகப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி வீட்டில் புகுந்து நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த பணத்தை குடும்பத்துடன் ஜாலியாக செலவு செய்துவிட்டேன். மேலும் 2 பவுன் தங்க செயினை தீவட்டிப்பட்டியில் ஒரு நகைகடையில் விற்று விட்டேன் என கூறினார். இதனையடுத்து சங்ககிரி போலீசார் 2 பவுனை மீட்டு, மைதிலியை சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் வேலுார் பெண்கள் தனிச்சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News