திட்டமிட்டபடி நாளை பேருந்துகள் இயங்காது - போக்குவரத்து தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு
திட்டமிட்டபடி நாளை பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 07:36 GMT
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்ள தயார் என அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து மாலை 6 மணி வரை காத்திருந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிற்சங்கங்களான அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி சிஐடியு தலைமையிலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12:00 மணி முதல் பேருந்துகள் இயங்காது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் ATP, AITUC, CITU, MLF, INTUC, HMS, PTS, DMTSP, BMS, TMTUC, TTSF, உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.