அப்பளம் போல் நொறுங்கிய கார் - காப்பாற்றிய சீட் பெல்ட்,பலூன்

திண்டிவனம் அருகே காரும் டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. காரை ஓட்டியவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், ஆபத்துகால பலூன் திறந்துகொண்டதாலும் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2023-10-31 07:01 GMT

விபத்துக்குள்ளான கார் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை மதுரவாயல் சொக்கநாதர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 46) இவரது காரில் அவலூர்பேட்டைக்கு வந்திருந்தார். பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றார். அப்போது, பிரகாசம் திண்டிவனம் அருகே சலவாதியில் நெடுஞ்சாலை உணவகத்தில், காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார், ரோஷணைபோலீஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் ஏற முயன்ற போது, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் (40) என்பவர் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி ஓட்டிச் சென்ற ஆவின் பால் டேங்கர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பிரகாசத்தின் காலில் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும், பிரகாசம் காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு காரை ஒட்டியதாலும், காரில் இருந்த காற்று பலூன் திறந்து கொண்டதாலும் கார் அப்பளம் போல் நொறுங்கியும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News