கட்சி கொடியுடன் கார்: போலீசார் வழக்குப்பதிவு!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காரில் கட்சிக்கொடியுடன் சுற்றிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Update: 2024-03-26 07:00 GMT
வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி சங்கரன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே இந்திய ஜனநாயக கட்சி கொடி பொருத்தப்பட்ட கார் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரின் பதிவெண்ணை வைத்து சோதனை நடத்திய பாகாயம் போலீசார் காரை ஓட்டி சென்ற அப்பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.