மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்குப்பதிவு

கலவை அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-05-04 06:05 GMT

மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை சேர்ந்த பிளஸ்-1 மாணவி, வீட்டில் அடிக்கடி வாந்தி எடுத்தார்.இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிப்பதாக கூறியதால் அவ்வப்போது பாலியல் ரீதியாக ஒன்றாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் இதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுவன் மிரட்டியதையும் தெரிவித்தார்.இந்த நிலையில் மகள் கர்ப்பமானது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News