அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு; இன்று தீர்ப்பு

சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

Update: 2024-03-06 02:02 GMT
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News