விவசாயம் மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு

முன்விரோதத்தில் விவசாயியை தாக்கிய மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

Update: 2023-12-11 06:52 GMT

விவசாயம் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் மீது வழக்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை அடுத்த பொறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகோவிந்தன். விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரபுவுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 28ம் தேதி வயலில் இருந்த ஹரிகோவிந்தனை, பிரபு தரப்பினர் இரும்பு ராடு, உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் ஹரிகோவிந்தன் படுகாயமடைந்தார். ஹரிகோவிந்தனின் மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் பிரபு, மாதவன் 36, மகாவிஷ்ணு 30, ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து மாதவனை கைது செய்தனர்.
Tags:    

Similar News