தொண்டு நிறுவனத்தில் மோசடி செய்த பெண் மீது வழக்கு
தொண்டு நிறுவன நிர்வாகியிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு
By : King 24x7 Website
Update: 2023-12-03 11:45 GMT
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரொனால்டு பெஞ்சமின் (வயது 42). இவர் தொண்டு நிறுவன அறக்கட்டளை நடத்தி வருகிறார். அவரிடம் இருந்து சுய உதவிக்குழு நடத்தி வரும் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பத்மாவதி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.11லட்சம் பெற்று சிலருக்கு வழங்கினார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி கட்டாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரொனால்டு பெஞ்சமின் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி மோசடி செய்த பத்மாவதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.