தஞ்சாவூரில் இளைஞர் கொலை சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு

தஞ்சையில் நடந்த கொலை சம்பவத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-14 12:28 GMT

தஞ்சாவூரில் இளைஞர் கொலை சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூரில் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள ரெட்டிப்பாளையம் சாலை காமாட்சிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் சதீஷ்குமார் (27). இவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூமணி என்கிற மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.  பிணையில் வெளியே வந்த சதீஷ்குமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது நுழைவு வாயில் எதிரே செவ்வாய்க்கிழமை (பிப்.13) பிற்பகல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.  இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த சிவசங்கர் மகன் மூட்டை மணி என்கிற மணிகண்டன் (32), தஞ்சாவூர் வடக்கு வாசல் மேல லைனை சேர்ந்த கிருஷ்ணன் மகன் டக்லஸ் மணி என்கிற மணிகண்டன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூமணி என்கிற மணிகண்டன் கொலை சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News