சாதிய சின்னம், கொடிகளை பயன்படுத்த தடை: ஆட்சியர் எச்சரிக்கை

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் சாதிய சின்னம், கொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-23 03:59 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட அறிக்கையில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் திறந்தவெளி வாகனங்களிலும், ஒலி பெருக்கி பொறுத்தப்பட்டுள்ள வாகனங்களிலும் வருவதற்கும் அனுமதி இல்லை. பொது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கிடையாது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது. பக்தர்கள் கடவுள் சம்பந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்தவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்பந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை. ஆனால் சாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, சாதி ரீயான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரைப் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ தடை செய்யப்பட்டுள்ளது. அறுவறுக்க தக்க வகையில் நடந்துகொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, சாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்துவதற்கோ எவ்வித அனுமதியும் கிடையாது. மேலும், எந்தவித ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோ, ஆபாச நடனமோ நடத்தக் கூடாது, மீறினால் சம்பந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றார் மேலும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Similar News