கள்ளச்சாராய விவகாரத்தில் ஏழு பேர் கைது

கள்ளச்சாராய விஷயம் தொடர்பான சிபிசிஐடி சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.இதுவரை சிபிசிஐடி காவல் துறையினரால் 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-21 16:13 GMT
கள்ளச்சாராயம்

கள்ளச்சாராய விஷயம் தொடர்பான சிபிசிஐடி சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.இதுவரை சிபிசிஐடி காவல் துறையால் 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கியுள்ளார். மெத்தனால் அடங்கிய 60 லிட்டர் 4 ட்யூப் - 30 லிட்டர் 3 ட்யூப்கள், 100 சிறிய பாக்கெட்டுகள் சின்னத்துரையிடமிருந்து கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் வாங்கியுள்ளார். கோவிந்தராஜன் சகோதரர் தாமோதரன் முதலில் குடித்து பார்த்து மெத்தனால் கெட்டுப் போய் இருப்பதாக தனது சகோதரர் கோவிந்தராஜ் மற்றும் மெத்தனாலை விற்பனை செய்த சின்னதுரையிடம் கூறியுள்ளார்.

கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால் அவரது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார் என்பது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதற்கு சின்னதுரை மெத்தனால் கெட்டுப்போகவில்லை, உயர் ரக சரக்கு எனக்கூறி விற்பனை செய்யுங்கள் பார்த்துக் கொள்ளலாம் எனச்சொல்லி கோவிந்தராஜிடம் விற்பனை செய்துள்ளார். எப்பொழுதும் முழு பணத்தையும் பெற்றுக் கொண்ட பிறகே சின்னதுரை மெத்தனாலை விற்று வந்த நிலையில் 17ஆம் தேதி கெட்டுப்போன மெத்தனாலை கொடுக்கும்போது முன்பணம் மட்டுமே பெற்றுள்ளார்.

சின்னதுரை மெத்தனால் விற்பனையில் முழு பணத்தை வாங்காமல் முன்பணத்தை பெற்றுக்கொண்டு மெத்தனாலை கொடுத்தது இதுவே முதல் முறை. மேலும், சின்னதுரை மெத்தனாலை மாதேஷ் என்பவரிடமிருந்து பெற்றதும் அவர் ஆந்திராவில் இருந்து கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. சின்னதுரை அளித்த தகவலின் பேரில் சின்னதுரை விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த மாதேஷை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மதன்குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் குண்டர் தரப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், கோவிந்தராஜின் மனைவி விஜயா, கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் இவர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை, சின்னதுரைக்கு மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் மற்றும் சின்னதுரை நண்பர்களான ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகிய ஏழு நபர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


Tags:    

Similar News