சி.பி.எஸ்.இ பொது தேர்வுகள் நாளை துவக்கம்

நாளை சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்குகிறது. நாளை துவங்க உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ பொது தேர்வு 29 மாநிலங்களில் உள்ள 877 மையங்களில் நடக்கிறது.

Update: 2024-02-14 16:19 GMT

சி.பி.எஸ்.இ பொது தேர்வு 


10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி நடைபெற இருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13ஆம் தேதி நிறைவடைகிறது அதேபோல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி தேர்வுகள் நிறைவடைய இருக்கிறது. இந்த தேர்வினை 29மாநிலங்களில் இருந்து 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10:30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1. 30 மணிக்கு முடியும். குறிப்பாக டெல்லி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லியை சுற்றி இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் காலை 10 மணிக்கு உள்ளாகவே தேர்வு மையங்களுக்கு உள்ளே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News