அதிமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மாற்றம்

கூட்டணியில் தேமுதிக.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Update: 2024-03-20 13:29 GMT

 கூட்டணியில் தேமுதிக.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை, கடலூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டு தேமுதிகவிற்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் என 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திருச்சி தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதாக செய்தி வெளியானதால் கவலை அடைந்திருந்த திருச்சி அதிமுகவினர் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News