சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு

இரயில்வே சுரங்கப்பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-14 17:31 GMT

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு-45 மற்றும் 71, கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (14.05.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News