சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருவள்ளுவர் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-30 02:44 GMT

திருவள்ளுவர் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.


கோடை வெப்பத்தின் தாக்கத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-180, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இன்று (29.04.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர் ஜெய சந்திர பானு ரெட்டி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News