மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சி
மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சியை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 16:04 GMT
மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயுமானவர் திட்டம் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற துறை மாவட்ட நிலை அலுவலர்களுக்கான புரிந்துணர்வுப் பயிற்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று (19.06.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.