சென்னை மாநகராட்சி அண்ணாநகர், அடையாறு சிக்னல்களில் பந்தல்!

சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், அடையாறு சிகனல்களில் பொதுமக்களின் தேவைக்காக பந்தல் அமைக்கப்பட்டது.

Update: 2024-05-09 17:16 GMT

பந்தல்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் வெயிலில் வரும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில் சென்னையில், ரிப்பன் மாளிகை எதிரில் உள்ள சிக்னல், எழும்பூர் தமிழர் சாலை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பந்தல் அமைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News