கிண்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2024-08-03 06:30 GMT

மு.க.ஸ்டாலின் 

சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு-2024 அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

பூங்காவில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார்.

சிறுவர் நூலகம், விழா அரங்கம், பார்வையாளர் வசதி மேம்பாடு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News