மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-12-18 05:51 GMT

மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை:எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கோவையில் இந்த திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதன் பின் இ-சேவை மையத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துச்சாமி,மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.இதனை தொடர்ந்து சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல்,நல திட்டங்கள் நிகழ்விற்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News