சின்னமலையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: அமைச்சர் தொடங்கி வைப்பு

சின்னமலை புனித தோமையார் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-13 12:44 GMT

முகாமை ஆய்வு செய்த அமைச்சர்

பெருநகர சென்னை மாநகராட்சி, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு-169, சின்னமலை, எல்.டி.ஜி. சாலையில் உள்ள புனித தோமையார் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துபார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மண்டலக்குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News