முதலமைச்சர் வருகை: பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-23 10:38 GMT

ஆய்வு பணியில் எஸ்பி

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 25.02.2024 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசைபாண்டியபுரம் மங்களகிரி விலக்கு அருகே மேடை அமைக்கும் பணி நடைபெறும் இடம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் வளாக பர்னிச்சர் பார்க் அருகே அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடம் ஆகியவற்றிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News