குமரியில் மக்களுடன் முதல்வர் நலத்திட்ட  உதவிகள் 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் த.மனோ தங்கராஜ் தக்கலை ஸ்ரீ லெட்சுமி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2024-02-17 03:17 GMT


கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் த.மனோ தங்கராஜ் தக்கலை ஸ்ரீ லெட்சுமி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினைத் தமிழக முதல்வர்  துவக்கி வைத்தார்.    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட  பயனாளிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் தக்கலை  ஸ்ரீ லெட்சுமி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.  நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.தமிழரசி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி,  திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் திரு.நசீர் உட்பட  பயனாளிகள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News