சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட வட மாநிலத்தவரின் ஒன்றரை வயது குழந்தை மீட்பு

சென்னை சென்ட்ரலில் வட மாநிலத்தை சேர்ந்த தம்பதியரின் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.

Update: 2024-04-15 08:02 GMT

குழந்தை கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வட மாநிலத்தை சேர்ந்த தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை நேற்று மதியம் காணாமல் போனது.இதையடுத்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் எண்ணூர் அருகே ஆட்டோவில் குழந்தையுடன் வந்த இருவர் பேசியதை கேட்டு ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களை இறக்கி விட்டு பின் தொடர்ந்துள்ளார். எண்ணூர் பாரதியார் நகரில் குழந்தை விற்பதற்காக விலைபேசிய போது இருவரையும் பிடித்து ஆட்டோ டிரைவர்கள் எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

Similar News