உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு- விசாரணை ஒத்தி வைப்பு
உயர் நீதிமன்ற மொத்த வளாகத்திற்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்குகளின் விசாரணை ஏப்ரல் 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-03-22 06:29 GMT
சிஐஎஸ்எஃப் படையினர்
குடும்ப நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களையும் உள்ளடக்கி, சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் விவகாரத்தில் சில பிரச்னைகள் உள்ளன எனவும் விரிவுபடுத்தவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது, 160 நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், 8 ஏக்கர் பரப்பளவில் 17 மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு தகவல் தெரிவித்தது.