வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 55 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 55 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-06 11:56 GMT

சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 55 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை, ராமச்சந்திரன் என்ற நபரின் சகோதரருக்கு உதவி மக்கள் தொடர்பை அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் 15 லட்சம் வாங்கிகொண்டு வேலை பெற்று தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த புகார் தவிர மேலும் 4 புகார்கள் பெறப்பட்ட மொத்த ஏமாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தொகை ரூ.55,50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு சென்னை மைலாப்பூ சாந்தோம் பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்ற்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்ட நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். 19.02.2024 வரை கைது செய்யப்பட்ட டேனியல் ராஜை நீதிமன்ற காவலில் வைக்க கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tags:    

Similar News