12 ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 12,696 மாணவர்கள் ஆப்சென்ட்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாட பொதுத் தேர்வினை 12 ஆயிரத்து 696 மாணவர்கள் எழுதவில்லை எனவும், 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Update: 2024-03-05 14:07 GMT

தேர்வு எழுதும் மாணவிகள் 

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வரிசையில் இன்று ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 3302 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 7 லட்சத்து 72 ஆயிரத்து 363 பள்ளி மாணவர்களும், 8 ஆயிரத்து 191 தனித்தேர்வர்கள் என 7 லட்சத்து 80 ஆயிரத்து 554 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 11 ஆயிரத்து 820 பேரும், தனித்தேர்வர்கள் 876 பேரும் என 12 ஆயிரத்து 696 பேர் தேர்வினை எழுதவரவில்லை.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுப்பட்டதாக 3 மாணவர்கள் பிடிப்பட்டுள்ளனர் என அரசுத் தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலத் தேர்விற்கான விடைத்தாள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News