5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா!

திமிரி அருகே காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

Update: 2024-04-13 06:06 GMT

உபசார விழா

ராணிப்பேட்டை திமிரி அருகே உள்ள காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து முடித்து, 6-ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா மற்றும் வழியனுப்பும் விழா பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமையில் நடைபெற்றது. பள்ளி கணக்காளர் எஸ்.லட்சுமி, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபி அனைவரையும் வரவேற்று பேசினார்.வகுப்பு ஆசிரியைகள் எஸ்.சந்தியா, எஸ்.பிரேமலதா, ஆர்.கலைவாணி ஆகியோர் மாணவர்களின் எதிர்கால படிப்பில் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் அவசியம் தேவை என வாழ்த்தி பேசினார்கள். பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு, கணக்காளர் எஸ்.லட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு திருக்குறள், ஆங்கில அகராதி, சிறுவர்களுக்கான நீதிக்கதை புத்தகம் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்கள். முடிவில் ஆசிரியை எஸ்.சந்தியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News