கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடை வழங்கல்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குளூனி மேல்நிலைப்பள்ளியில் ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

Update: 2023-12-16 10:48 GMT

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை வழங்கல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் குளூனி மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோ டிரைவர்கள் 250 பேருக்கு, பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளி முதல்வர் ரீனா, தாளாளர் லீமா, தொழில் அதிபர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடை வழங்கினர். இந்த விழாவில் பெற்றோர்,

ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் சூரியா தருண், செயலாளர் கே.எம்.உலகநம்பி, நிர்வாகிகள் என்ஜினீயர் செந்தில்நாதன், டாக்டர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News