பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-18 16:52 GMT

பதற்றமான வாக்குசாவடிகளில் ஆய்வு

வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியரும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அதாவது அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையம், வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News