வரும் 30ஆம் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Update: 2024-05-27 14:10 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு அவைத்தலைவர் அருணாசலம் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் ஜூன் 3-ந்தேதி கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

மேலும் கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. எனவே கூட்டத்தில் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News