பறிமுதல் இரு சக்கர வாகனங்கள் ரூ.9.82 லட்சத்துக்கு ஏலம்

அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ரூ.9.82 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

Update: 2024-06-19 10:00 GMT

அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ரூ.9.82 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.


அரியலூர், ஜூன் 19- அரியலூரில், மது விலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரு சக்கர வாகனங்கள் ரூ.9.82 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தைலமை வகித்தார். மதுவிலக்கு குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன், ஆய்வாளர் தண்டபாணி, உதவி ஆய்வாளர் அமரஜோதி ஆகியோர் முன்னிலையில் 50 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. இந்த பொது ஏலத்தில் 100}க்கும் மேற்பட்டோர் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டு இரு சக்கர வாகனங்களை தேர்வு ஏலம் எடுத்தனர். ஏலத்தில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் ரூ.9,82,800} க்கு ஏலம் போனது.
Tags:    

Similar News