சீட்டு பணம் கொடுக்க சென்ற நபரிடம் பணம் பறிமுதல்!
வேலூர் தொரப்பாடி அருகே சீட்டு பணம் கொடுக்க சென்ற நபரிடம் ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 05:03 GMT
பணம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை நடத்தியபோது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்ததில் வேலூர் அல்லாபுரத்தை சேர்ந்த பாலு என்பவர் ரூ.80 ஆயிரத்து 720 வைத்திருந்தது தெரியவந்தது. அவர் போளூரில் ஒருவருக்கு சீட்டு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தார். எனினும் ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.