தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ,தாடிக்கொம்பு பகுதியில் கடைகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சப்ளை செய்தவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-29 07:39 GMT

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, வசந்தன், கண்ணன், ஜாபர்சாதிக் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் தாடிக்கொம்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மூடைகளை கட்டிக்கொண்டு கடைகள் முன் பகுதியில் நின்று தேவையான அளவு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் எரியோடு பகுதியை சேர்ந்த பாலு என்பது தெரிய வந்தது இதனை அடுத்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News