கலவை அருகேமணல் கடத்திய மினி வேன் பறிமுதல்!

கலவை அருகே மணல் கடத்தி வந்த மினி வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-04-05 10:59 GMT

கலவை அருகே மணல் கடத்தி வந்த மினி வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே மேல்நேத்தப்பாக்கம் பகுதியில் கலவை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சதீஷ்குமார், சிவசங்கரி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மடக்கி சோதனை செய்ததில் புதுப்பாடியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மணல் கடத்தி வந்த புதுப்பாடி ஜி.எம்.நகர் புதிய தெருவை சேர்ந்த சுதாகர் (வயது 33), ஜெயவர்மன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மினிவேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாலாஜா சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News