காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-29 04:56 GMT

சத்தியமூர்த்தி பவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுள் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், அகில இந்திய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தான விஷயங்கள் குறித்தும், கூட்டணி கட்சியில் கேட்கவிருக்கும் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்தும், இன்னபிற முக்கியமான தேர்தல் விஷயங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News