மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-03-08 10:45 GMT

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தி மோடி அரசு, இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி தூத்துக்குடியில் இன்று காலை எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவர் அருகே உள்ள பாரத ஸ்டேட் பாங்க் கிளை முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவா் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News