நீட் தேர்வு முறைகேடு - காங்., போராட்டம்

காங்கிரஸ் சார்பாக - நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Update: 2024-06-10 13:46 GMT

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாளை மாலை 4.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.
Tags:    

Similar News