மின்சாரம் தாக்கியதில் கட்டிட மேஸ்திரி பலி

ஆர்க்காடு அருகே கட்டிட மேஸ்திரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-07 08:33 GMT

கட்டிட மேஸ்திரி பலி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதி கலவை அருகே உள்ள பரிக்கல் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (51). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ஆற்காடு தனலட்சுமி நகர் பகுதியில் புதிதாக கட்டப்படுகின்ற வீட்டில் கட்டிடப் பணியில் சரவணன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பியின் மீது கை பட்டதாக கூறப்படுகிறது இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்தபோது சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News