யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் பணி; கோர்ட் உத்தரவு

கோவையில் யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2024-06-29 04:33 GMT
யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் பணி; கோர்ட் உத்தரவு

கோவையில் யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

  • whatsapp icon
கோவையில், யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்த வழக்கு ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கல்லாரில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டத்தை காலி செய்யாவிட்டால் , தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை.
Tags:    

Similar News