சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழுவினருடனான 2வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-30 10:27 GMT
ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழுவினருடனான 2வது ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (29.01.2024) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) லலிதா, வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், (தெற்கு), ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு அவர்கள், நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.