குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு

Update: 2023-12-19 02:36 GMT

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த இரு நாள்களாகப் பெய்துவரும் தொடா் மழை காரணமாக குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி,முதலாவது நடைபாலம் வரை தண்ணீா் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. பழையகுற்றாலம் அருவி அருகே யாரும் செல்ல முடியாத அளவிற்கு படிக்கட்டுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல புலியருவி, சிற்றருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுவதால் இரண்டாவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. சிற்றாற்றில் தென்காசி-குற்றாலம் சாலையில் யானைப் பாலம் சிற்றாற்றில் பாலத்தை தொட்டு செல்லும் வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனையடுத்து தென்காசி காவல் துறையினா் சிற்றாற்றில் குளிப்பதற்கோ, பாா்வையிடுவதகோ செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Tags:    

Similar News