வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-01 15:58 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயர் திருமதி ஆர்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார்,மண்டலக் கண்காணிப்பு அலுவலர் கணேஷ், மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News