தமிழக மீனவர்களுக்கு ஜூலை.2 வரை நீதிமன்ற காவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்களை ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-06-19 02:35 GMT

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி நேற்று  காலை இலங்கை கடற்படையினர் நான்கு மீனவர்களையும் ஒரு படகையும் கைப்பற்றி இலங்கைக்கு அழைத்து சென்ற விவரத்தில் தற்பொழுது 4 பேரையும் ஜூலை இரண்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News