சிறை கைதிகளுக்கு மன அழுத்தம் போக்கும் கலை நிகழ்ச்சி

Update: 2023-12-08 06:11 GMT

கலை நிகழ்ச்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதை சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் கூறும் போது, சேலம் மத்திய சிறையில் 30 கைதிகள் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்களது மன அழுத்தத்தை போக்கும் விதமாக கவிதை, பாட்டு, கட்டுரை, பலகுரலில் பேசுதல் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் அவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் பரிசு வழங்கப்பட்டன என்று கூறினார். முன்னதாக மேட்டூர் அரசு மருத்துவமனை மன நல டாக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசினார்.
Tags:    

Similar News