கோபிசெட்டிபாளையம் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல்: டிரைவர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-28 15:02 GMT

கோப்பு படம் 

கோபிசெட்டிபாளையம் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது கோபிசெட்டிபாளையம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் வயது 26 டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி ரத்தின பிரியா கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் மனைவி இரத்தின பிரியாவை ஆனந்தன் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனால் கணவரை விட்டு பிரிந்து ரத்தினப்பிரியா கோபி வடக்கு வீதி வாய்க்கால் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார் மேலும் இது சம்பந்தமான வழக்கு கோபி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஆனந்தன் மனைவியின் வீட்டிற்கு சென்று தனக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல வருகிறாயா என தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இது குறித்து இரத்தின பிரிய போலீசில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்

Tags:    

Similar News