எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தாக்கல்

கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகின்றது.;

Update: 2024-06-25 02:01 GMT

கோவை நீதிமன்றம் 

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பது என கூறப்படும் நிலையில் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க புகழேந்தி,ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி சசிகலா,தினகரன்,ஓ.பிஎஸ்,இ.பி.எஸ் என பல அணிகளாக பிரிந்து இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பு குழுவினை கடுமையாக விமர்சனம் செய்தார்.குறிப்பாக நீதிமன்றம் செல்வோர் ஒருங்கிணைப்பு குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? என கேள்வி எழுப்பியதுடன் கோவையை சேர்ந்த நபர் ஓ.பி.எஸ். இருந்த போது கட்சியில் சேர்க்கப்பட்ட நபர் அதற்கு முன் கட்சியிலேயே இல்லாத ஒரு நபர் இந்த குழுவில் உள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை பற்றியும் ஒருங்கிணைப்பு குழுவை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கிற்காக மனு தாக்கல் செய்தார்.இந்த மனு வரும் 26 ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News