பரமத்தி வேலூரில்  குஷ்பு உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பரமத்தி வேலூரில் மகளிர் உரிமை தொகை குறித்து விமர்சனம் செய்த குஷ்பு உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-03-12 13:54 GMT

பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க அரசு மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து தவறாக பேசிய குஷ்புவை கண்டித்து பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பியும், குஷ்புவின் உருவ பொம்மை எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்திற்கு வேலூர் பேரூர் தி.மு.க செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி கண்டன கோசங்களை வாசித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர்கள் கருணாநிதி,முருகவேல் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயஜோதி மற்றும் பேரூர்,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News